Sports
ரூ.4,923 கோடி ஊதியம் : ரொனால்டோவை இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்த சவுதி அணி... விவரம் உள்ளே !
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய பின்னர் சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணியில் இரண்டு ஆண்டுகள் விளையாட ஓப்பந்தமானார்.
அவரை அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025- ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டோடு அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ளது.
இதனால் அவர் அதே அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் அவர் ஓய்வு பெறப்போவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், அல் நாசர் அணி ரொனால்டோவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் படி வரும் 2027-ம் ஆண்டு வரை ரொனால்டோ அல் நாசர் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் ரொனால்டோ ரூ.4,923 கோடி ஊதியமாக பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!