Sports
சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்தியா பங்கேற்கவில்லை என்றால், தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு ?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் ஐசிசிக்கு பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அதே நேரம் இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் ஏற்க மறுத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரையே வேறு நாட்டில் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாகவும், ஒருவேளை அப்படி நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!