Sports
நாடு திரும்ப முடியாத சிக்கலில் ஷாகிப் அல் ஹசன் : முடிவுக்கு வருகிறதா கிரிக்கெட் வாழ்க்கை !
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், மீண்டும் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில், ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுட்டள்ளது. அந்த வகையில் வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் கடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் கொலை வழக்கில் அவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் 28-வது குற்றவாளியாக ஷாகிப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேச அணி இந்தியாவுக்கு எதிராக ஆடியபோது அந்த அணியில் ஷாகிப் இடம்பிடித்திருந்தார். ஆனால் அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாகிப் விலகியுள்ளார். இதற்கு அவர் நாடு திரும்ப முடியாத சிக்கலில் இருப்பதே காரணமாக கூறப்பட்டது.
இதனால் ஷாகிப் அல் ஹசனின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அவரால் வெளிநாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கமுடியும் என்பதால் அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!