Sports
“RCB-யை IPL சாம்பியனாக்க வேண்டும் என்பதே எனது கனவு” - CSK குறித்து தினேஷ் கார்த்திக் பேசியது என்ன ?
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த 2022-ம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கடைசியாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடினார். அதனைத் தொடர்ந்து சர்வதேச மற்றும் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் பயிற்சியாளராக அவர் ஆடிய பெங்களூரு அணி நியமித்தது.
இந்த நிலையில் பெங்களூரு அணியை சாம்பியனாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “என் வாழ்க்கையில் ஐ.பி.எல் இல் பெங்களூரு அணிக்காக ஆடிய 3 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியானது. அதனை என்னால் மறக்கவே முடியாது. அந்த அணியின் ரசிகர்கள் தீவிரமானவர்கள்.
அந்த அணிக்காக அடுத்த ஆண்டு முதல் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூரு அணியை சாம்பியனாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதனை அடுத்த முறை நிறைவேற்ற முயற்ச்சி செய்வேன். சென்னை அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான். ஆனால், ஏலத்தின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறையில் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். எனவே அதனை கடந்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!