Sports
களைகட்டும் பாராலிம்பிக்ஸ் போட்டி : 7 பதக்கங்களை வென்ற இந்தியா... பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அவானி லெகாரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் இந்தியாவின் மோனா அகர்வாலும் வெண்கலம் வென்றிருந்தார்.
பின்னர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் 14.21 நொடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்ற நிலையில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் வெண்கலப்பதக்கத்தை வென்று இந்த பாரா ஒலிம்பிக்கீழ் இரு பதக்கங்களை வென்றுள்ளார்.
அதே போல துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான மணிஷ் நார்வால் 234.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அதே பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்ஸ்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார். உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதனிடையே பாரா ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றதின் மூலம் தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தற்போது வரை இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!