Sports
"CSK அணிக்காக விளையாடியது கடவுள் அளித்த பரிசு" - இலங்கை நட்சத்திர வீரர் நெகிழ்ச்சி !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஏராளமான வீரர்கள் தற்போது உலகளவில் மிகப்பெரும் வீரர்களாக திகழ்ந்து வருகிறார்.
அப்படி தோனியால் அறிமுகம் செய்யப்பட்டு உலகின் மிகச்சிறந்த டி20 பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் இலங்கை அணி வீரர் பதிரனா. ஐபிஎல் தொடரில் பும்ராவுக்கு நிகராக சிறப்பாக பந்துவீசிவரும் பதிரனா எதிர்வரும் காலத்தில் இப்போதை விட சிறப்பாக ஆடுவார் என பலரும் கூறி வருகினறனர்.
இந்த நிலையில், ஓய்வறையில் தோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று என்று பதிரனா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. என் பெயர் கூட யாருக்கும் தெரியாது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் சென்னை அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு ஏப்ரல் சொல்ல வேண்டும். அதன் பின்னரே என் வாழ்க்கை மாறியது. அதிலும் .ஓய்வறையில் தோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!