Sports
"விராட் கோலி, ரோஹித் சர்மாக்கான மாற்றை இந்தியா விரைவில் கண்டறியும்" - இங். முன்னாள் வீரர் கணிப்பு !
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த உலகக்கோப்பை டி20 தொடர் வரை விளையாட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்தார். அந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கான மாற்றை இந்திய அணி விரைவில் கண்டுபிடித்துவிடும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக் வாகன் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இன்னும் நிறைய ஐசிசி கோப்பையை வென்றிருக்க வேண்டும். ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையை வென்றார்.
அதன்பின்னர் மீண்டும் அவர் அதனை வெல்ல, 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக இவர்களை மிஸ் செய்வார்கள். ஆனால் இவர்களுக்கு மாற்று வீரர்கள் உடனடியாகவே கிடைத்து விடுவார்கள். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் பலர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!