Sports
இது மைதானமா ? பூங்காவா ? - உலகக்கோப்பைக்கான நியூயார்க் மைதானம் குறித்து டிராவிட் கருத்து !
20 அணிகள் கலந்துகொள்ளும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் நிலையில், லீக் போட்டியில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இந்தியா நியூயார்க் மைதானத்தில் தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானம் 34 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இரண்டே மாதங்களில் உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படும் பிட்ச் ஆடுகளத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஒரு பூங்காவில் இருப்பதுபோல இருக்கிறது என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியூயார்க் மைதானம் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "உலகக் கோப்பை தொடர் என்றாலே ஒரு பெரிய அல்லது பாரம்பரியமான மைதானத்தில்தான் போட்டிகள் நடைபெறும். ஆனால் இங்கு ஒரு பூங்காவில் இருப்பதை போல இருக்கிறது. இந்த மைதானமே வித்தியாசமாக இருக்கிறது.
அமெரிக்கா போன்ற ஒரு புதிய நாட்டிற்கு வருவது உற்சாகமாகத்தான் இருக்கிறது என்றாலும் இங்குள்ள சூழல் வித்தியாசமாக இருக்கிறது. இந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிகிறது. எனினும் போட்டிக்குத் தயாராவது, பயிற்சி செய்வது போன்ற எங்களின் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!