Sports
இது மைதானமா ? பூங்காவா ? - உலகக்கோப்பைக்கான நியூயார்க் மைதானம் குறித்து டிராவிட் கருத்து !
20 அணிகள் கலந்துகொள்ளும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் நிலையில், லீக் போட்டியில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இந்தியா நியூயார்க் மைதானத்தில் தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானம் 34 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இரண்டே மாதங்களில் உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படும் பிட்ச் ஆடுகளத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஒரு பூங்காவில் இருப்பதுபோல இருக்கிறது என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியூயார்க் மைதானம் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "உலகக் கோப்பை தொடர் என்றாலே ஒரு பெரிய அல்லது பாரம்பரியமான மைதானத்தில்தான் போட்டிகள் நடைபெறும். ஆனால் இங்கு ஒரு பூங்காவில் இருப்பதை போல இருக்கிறது. இந்த மைதானமே வித்தியாசமாக இருக்கிறது.
அமெரிக்கா போன்ற ஒரு புதிய நாட்டிற்கு வருவது உற்சாகமாகத்தான் இருக்கிறது என்றாலும் இங்குள்ள சூழல் வித்தியாசமாக இருக்கிறது. இந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிகிறது. எனினும் போட்டிக்குத் தயாராவது, பயிற்சி செய்வது போன்ற எங்களின் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!