Sports
ஷர்துல் தாகூரின் கோரிக்கையை ஏற்ற BCCI : தேர்வு குழுவினருக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்க முடிவு !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ரஞ்சி கோப்பை போட்டிக்கான முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்து வருவதாகவும் விமரிசனங்கள் எழுந்து வருகிறது.
அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பைக்கு இடையே இரண்டு நாட்கள்தான் இடைவேளை இருப்பதாகவும், இப்படி இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஆடினால் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள் எனவும் விமர்சனம் எழுந்தது. அதிலும் இந்திய அணி வீரர் வீரர் ஷர்துல் தாகூர் வெளிப்படையாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அனைத்து உள்நாட்டு தொடர்களுக்கும் போதிய இடைவெளி அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை ஆகிய போட்டிகளுக்கு போதிய இடைவேளை விட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, துலீப் கோப்பைக்கான அணிகளை அந்தந்த மண்டல அணி தேர்வாளர்களே இதுவரை அறிவித்து வந்தனர். இனி தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம் போன்ற அணிகளை தேர்வு செய்யும் உரிமை தேசிய தேர்வு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 என மண்டல அணி வீரர்களை தேசிய தேர்வு குழுவினரே தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!