Sports
ஷர்துல் தாகூரின் கோரிக்கையை ஏற்ற BCCI : தேர்வு குழுவினருக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்க முடிவு !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ரஞ்சி கோப்பை போட்டிக்கான முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்து வருவதாகவும் விமரிசனங்கள் எழுந்து வருகிறது.
அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பைக்கு இடையே இரண்டு நாட்கள்தான் இடைவேளை இருப்பதாகவும், இப்படி இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஆடினால் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள் எனவும் விமர்சனம் எழுந்தது. அதிலும் இந்திய அணி வீரர் வீரர் ஷர்துல் தாகூர் வெளிப்படையாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அனைத்து உள்நாட்டு தொடர்களுக்கும் போதிய இடைவெளி அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை ஆகிய போட்டிகளுக்கு போதிய இடைவேளை விட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, துலீப் கோப்பைக்கான அணிகளை அந்தந்த மண்டல அணி தேர்வாளர்களே இதுவரை அறிவித்து வந்தனர். இனி தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம் போன்ற அணிகளை தேர்வு செய்யும் உரிமை தேசிய தேர்வு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 என மண்டல அணி வீரர்களை தேசிய தேர்வு குழுவினரே தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !