Sports
"மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது" - முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.
அதோடு ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படாத மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வென்று தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் மும்பை அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "வெளியில் இருந்து நாம் பார்க்கும் போது மும்பை அணிக்குள் நிறைய விஷயங்கள் நடப்பது தெரிகிறது. அவர்களுடைய அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒன்றாக பேசி அணிக்காக சேர்ந்து விளையாடவில்லை என்பது நன்றாக தெரிகிறது.
பெரிய தொடரை வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக சேர்ந்து விளையாட வேண்டும். ரோஹித் சர்மா சதமடித்து அல்லது பாண்டியா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அல்லது பும்ரா ஆகியோர் தனித்தனியாக ஆடினால் ஏதும் நடக்காது. தனிநபர்களால் கோப்பையை வெல்ல முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !