Sports
ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அதிருப்தி : INSTA-வில் பகிர்ந்த மூத்த மும்பை அணி வீரர் !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மும்பை அணி வீரர் முகமது நபி பாண்டியாவுக்கு எதிரான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கான மும்பை அணியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் இடம்பெற்றிருந்தார். மூத்த வீரரான அவருக்கு கடைசி வரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச வாய்ப்பு அளிக்கவில்லை.
முகமது நபிக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தது குறித்து இன்ஸ்டாகிராமில் ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர், "கேப்டன்களின் சில முடிவுகள் மிகவும் விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இன்று நபி பந்து வீசவே இல்லை. இவர் ஆட்டத்தை மாற்றக் கூடியவர்"என்று கூறியிருந்தார்.
ரசிகரின் அந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் முகமது நபி பகிர்ந்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது முகமது நபி திருப்தியாக இருக்கிறார் என்றும், அதனைத்தான் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!