Sports
ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அதிருப்தி : INSTA-வில் பகிர்ந்த மூத்த மும்பை அணி வீரர் !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மும்பை அணி வீரர் முகமது நபி பாண்டியாவுக்கு எதிரான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கான மும்பை அணியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் இடம்பெற்றிருந்தார். மூத்த வீரரான அவருக்கு கடைசி வரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச வாய்ப்பு அளிக்கவில்லை.
முகமது நபிக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தது குறித்து இன்ஸ்டாகிராமில் ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர், "கேப்டன்களின் சில முடிவுகள் மிகவும் விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இன்று நபி பந்து வீசவே இல்லை. இவர் ஆட்டத்தை மாற்றக் கூடியவர்"என்று கூறியிருந்தார்.
ரசிகரின் அந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் முகமது நபி பகிர்ந்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது முகமது நபி திருப்தியாக இருக்கிறார் என்றும், அதனைத்தான் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!