Sports
64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி : 9 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் அசத்தல்!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து 5வது டெஸ்ட் போட்டி மாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 477 ரன்களை எடுத்தது. ரோகித், சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். பிறகு இரண்டாவது இன்னிங்கிஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். மேலும் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் டெஸ்ட்போட்டியில் 5 விக்கெட்டுகளை அதிகம் கைப்பற்றிய கும்ப்லேவின் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார். 132 போட்டிகளில் கும்ப்லே 35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அஸ்வின் 100 போட்டிகளில் 36 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!