Sports
மகளிர் ஐபிஎல் தொடரை விட மோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் : ரசிகர்கள் கிண்டல் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஐபிஎல் ரீதியிலான லீக் தொடர்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்ற பெயரில் லீக் தொடரை ஒன்றை தொடங்கியது. ஆனால், அது ஐபிஎல் போல மிகப்பெரிய வெற்றியை பெறாமல் சோபித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் மகளிர் ஐபிஎல் தொடரை விட மோசமான நிலைக்கு சென்றதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.
இந்த தொடர் தற்போது பெங்களுருவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை காண அதிகளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருகின்றனர். இதனால் பெரும்பாலான அரங்கங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் விரைவில் ஐபிஎல் தரத்துக்கு இதனை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
ஆனால், பாகிஸ்தான் தேசிய அணி வீரர்கள் மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் போட்டிகளை காண குறைவான அளவு ரசிகர்களே மைதானத்துக்கு வருகை தருவதாக அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்களில் காணமுடிகிறது. இதனை குறிப்பிட்டே மகளிர் ஐபிஎல் தொடரை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் மோசமான நிலையில் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!