Sports
Bazball தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி : முதல் போட்டியில் தோற்றும் தொடரை வென்று அசத்திய இந்தியா !
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
பிறகு விளையாடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேலி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 307 ரன்களை எட்டி ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதேபோல் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் 192 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா 55 ரன்களும், ஜெய்ஸ்வால் 37 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த படிதார், சர்ஃப்ராஸ் கான் ரன் ஏதும் குவிக்காமலும், ஜடேஜா 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 120 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தவித்தது.
எனினும் பின்னர் வந்த துருவ் ஜூரல், கில் இணை அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர், கீழ் 52 ரன்கள் குவித்தும், ஜூரல் 39 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியில் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் இணை பொறுப்பேற்று bazball முறையில் அந்த ஆடி வந்தது.
இது பெரும் வெற்றிகரமாக வலம்வந்த நிலையில், அதற்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் இணை பொறுப்பேற்று 8 தொடரில் இங்கிலாந்து அணி ஆடியுள்ள நிலையில், அதில் 4 தொடர்களில் வென்றும், 3 தொடர்களை சமன் செய்தும் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவுக்கு எதிராக முதல்முறை இங்கிலாந்து அணி மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் காலகட்டத்தில் தொடரை இழந்துள்ளது.
Also Read
-
கட்டுகடுங்காத கூட்டம்: உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு பெருகும் ஆதரவு -விழிபிதுங்கி நிற்கும் பாஜக!
-
வழிப்பறியில் ஈடுபடும் பாஜகவினர் : இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜக நிர்வாகிகள் கைது - வேலூர் போலீஸார் அதிரடி !
-
"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்" - சென்னை பெருநகர காவல் துறை!
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !