Sports
டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முயற்சி- தென்னாப்பிரிக்க வாரியத்தின் அறிவிப்பால் சர்ச்சை- முழு விவரம் என்ன?
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே.
அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' கோப்பை உருவாக்கப்பட்டது. இந்த கோப்பையை முதலாவது ஆண்டு நியூஸிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு இந்த கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' தொடர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஐசிசி-யும் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதே நேரம் சில வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் தென்னாபிரிக்கா வாரியம் அந்த நாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் முக்கிய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு செல்லும் டெஸ்ட் அணிக்கு இரண்டாம் நிலை வீரர்களை அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா வாரியம் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் ஆடும் வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்ற விதியையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முயற்சி என பல்வேறு தரப்பினரும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!