Sports
நாளை டி20 போட்டி : அணியில் இணையாமல் சுற்றுலா சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்.. முழு விவரம் என்ன ?
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் உள்ளிட்ட ஏராளமான இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க தொடரில் இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் , ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல் ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா என 3 விதமான இந்திய கேப்டன்கள் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இதில் டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த 3 வீரர்கள் இதுவரை இந்திய அணியில் இணையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீபக் சஹர், டி20 அணியின் துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் ஆகியோர் இன்னும் இணையவில்லை என்றும், அல்லது மிகவும் தாமதமான இணைந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில், தீபக் சஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அணியில் இணையாத நிலையில், ஜடேஜா குடும்பத்தினருடன் பாரிஸ் சுற்றுலா சென்றுள்ளார் என்றும், சுப்மன் கில் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்றும், இதன் காரணமாக இருவரும் அணியில் இணையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!