Sports
"தென்னாப்பிரிக்காவில் வைத்து எங்கள் அணியை இந்தியா வீழ்த்துவது கடினம்" - ஜாக் காலிஸ் கருத்து !
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் உள்ளிட்ட ஏராளமான இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க தொடரில் இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் , ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல் ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா என 3 விதமான இந்திய கேப்டன்கள் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், இந்த முறை இந்திய அணி வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவில் வைத்து தோற்கடிப்பது கடினம் என தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " உண்மையில் இது ஒரு நல்ல டெஸ்ட் தொடராக இருக்கப்போகிறது. இந்திய அணி வலுவாக இருக்கிறது. ஆனால், இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவில் வைத்து தோற்கடிப்பது கடினம். கேப் டவுன் இந்தியாவிற்கும் பொருத்தமான ஆடுகளங்களாக இருக்கும். மற்ற இரண்டு போட்டிகளும் நெருக்கமான போட்டிகளாக இருக்கும் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!