Sports
"அரையிறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை சந்திக்க வேண்டும்" - இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த தோல்வியோடு பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து முக்கியமான நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைபடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தங்கள் அரையிறுதி வாய்ப்பை இன்னும் அந்த அணி தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும் என விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " இந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்தியாவுடன் விளையாட வேண்டும். அப்படி விளையாடும் பட்சத்தில் அந்தப்போட்டி சிறந்த அரையிறுதி போட்டியாக பதிவாகும்" என்று கூறியுள்ளார்.
தற்போது முதல் மூன்று இடங்களை இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பிடித்துள்ள நிலையில், நான்காம் இடத்துக்காக போட்டியில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!