Sports
உலகக்கோப்பை உணவு மெனுவில் இடம்பெறாத மாட்டுக்கறி.. BCCI-யின் அரசியலுக்கு இணங்கிய ICC.. முழு விவரம் என்ன ?
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடரில் வென்று இந்தியா இன்னும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது. இந்தத் தொடருக்காக அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்தியா வந்துள்ள நிலையில், அவர்களுக்கான உணவு மெனு தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், அதில், மாட்டுக்கறி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய உணவாக மாட்டுக்கறி இருக்கும் நிலையில், அந்த உணவு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு அணிகளின் சார்பில் முணுமுணுப்புகள் எழுந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சர்ச்சை குறித்து இந்தியாவையும், ஐசிசி அமைப்பையும் விமர்சித்துள்ளன. பொதுவாக ஐசிசி தொடர்களில் மாட்டுக்கறி உணவு வகைகள் இடம்பெறும் நிலையில், பிசிசிஐ-யின் அழுத்தம் காரணமாகவே இந்தியாவில் நடக்கும் தொடரும் மாட்டுக்கறி இடம்பெறவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!