Sports
3 விதமான கிரிக்கெட் வடிவிலும் முதலிடம்.. 11 ஆண்டுகள் உடைக்கப்படாமல் இருந்த சாதனை.. சமன் செய்த இந்தியா !
கடந்த 2012-ம் ஆண்டு கிரேம் ஸ்மித் தலைமையில் டெஸ்ட் தொடரில் தென்னாப்ரிக்கா அணி முதல் இடம் பிடித்தது. அதே போல அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தலைமையில், ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி முதலிடம் பிடித்தது.
அந்த காலகட்டத்தில் தென்னாபிரிக்க அணியில், காலிஸ், ஆம்லா, டு பிளஸிஸ், டுமினி, பௌச்சர், இம்ரான் தாஹிர், மார்கல் சகோதரர்கள், ஸ்டெயின், பிளாண்டர் போன்ற தலைசிறந்த வீரர்கள் இடம்பெற்று உலகத்தின் அத்தனை நாடுகளுக்கும் சென்று வெடிகொடியேற்றினர்.
அந்த ஆண்டு தென்னாபிரிக்கா பிடித்த 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் முதலிடம் என்ற சாதனையை அதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி எந்த அணியும் எட்டிப்பிடிக்கவில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் கூட பல்வேறு சந்தர்ப்பத்தில் எதாவது 2 விதமான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்தாலும், 3 விதமான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கவில்லை.
ஆனால், தென்னாபிரிக்கா இந்த சாதனையை படைத்து சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அதே சாதனையைப் படைத்துள்ளது. டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் இந்திய அணி அந்த தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தது. அதே போல டி20-யிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.
ஆனால், ஒருநாள் போட்டிகளில் மட்டும் 2-ம் இடத்தில் நீடித்து வந்தது. ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றிபெற்றால் ஒருநாள் தொடரிலும் முதலிடம் பிடிக்கலாம் என இருந்த நிலையில், அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது. ஆனால், தற்போது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டி தரவரிசையிலும் முதலிடம் பிடித்து இந்திய அணி தென்னாபிரிக்காவின் சாதனையை சமன் செய்துள்ளது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!