Sports
கிடைத்த புள்ளிகளில் பாதிக்கு மேல் இழந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா.. ஒரே தொடரில் சரிந்த இரு அணிகளில் கனவு !
டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. . இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அந்த தொடரில் கம்பேக் செய்த இங்கிலாந்து அணி, 3-வது டெஸ்ட் மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-2 என்று சமன் செய்தது. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்த தொடரை இங்கிலாந்து அணி போராடி சமன் செய்தாலும் அந்த அணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடரில் மட்டும் ஐசிசி-யின் புதிய விதிமுறை காரணமாக ஓவர்களை குறித்த நேரத்திற்குள் வீசாததால் இங்கிலாந்து 19 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளை இழந்துள்ளது. இங்கிலாந்து 2 வெற்றிகள் மற்றும் ஒரு ட்ராவுடன் மொத்தம் 28 புள்ளிகள் பெற்ற நிலையில், 19 புள்ளிகளை அந்த அணி இழந்துள்ளது.
அதே போல இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியும் 2 வெற்றிகள் மற்றும் ஒரு ட்ராவுடன் 28 புள்ளிகள் பெற்ற நிலையில் அந்த அணி 10 புள்ளிகளை இழந்து இந்தியா தொடரில் மொத்தம் 18 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூலை 13ம் தேதி தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டி ஸ்லோ ஓவர் ரேட்டுக்கான புதிய அபராத விதிகள் வகுக்கப்பட்டன. அதோடு இதில், அணிகள் தங்கள் ஊதியத்திலிருந்து 5% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!