Sports
பணம் இருந்து என்ன பயன்? நாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் போல இல்லை -இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென பெய்த மழை காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் உலககோப்பைக்கு தகுதி பெறாத மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் இந்த தோல்வியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சமீப காலமாக இந்திய அணி வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்து இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து பிற போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது.
கடந்த இரண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் நாம் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பிசிசிஐயிடம் பணமும் அதிகாரமும் இருந்தும், இங்கிலாந்து அணியை போல் ரசிகர்களிடையே எவ்வித உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை, ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணியை போல பிற அணிகளை மிரட்டியதும் இல்லை. நாம் வீரர்களின் மோசமான ஆட்டத்தை கூட கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!