Sports

சென்னை அணியில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்.. பிளே ஆஃப் சுற்றில் இடம்பெறமாட்டார் என அதிர்ச்சி தகவல் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.

அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், ஐபிஎல் மினி ஈழத்தில் சென்னை அணி பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஆனால் சென்னை அணிக்காக பென் ஸ்டோக்ஸ் முதல் இரு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். அதன்பின் நடந்த நான்கு ஆட்டங்களை காயம் காரணமாக அவர் தவறவிட்டார். இந்த நிலையில் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு விரைவில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜூன் 16ஆம் தேதி ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளதால், நிச்சயம் அவர் இங்கிலாந்து திரும்புவார் என்று கூறப்படுகிறது

Also Read: அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடி.. லக்னோ அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ என்ன?