Sports
காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் IPL-ல் இருந்து விலகல்.. ரசிகர்கள் சோகம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கே.எல்.ராகுல் சொதப்பிய நிலையில், அணியில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கேப்டன் பதவி திரும்பபெறப்பட்டது. இந்தியா நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக அந்த அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தி வருகிறார்.
அவர் மெதுவாக ஆடுகிறார் என ஐபிஎல் தொடரிலும் விமர்சனம் எழுந்த நிலையில், அணியின் பல்வேறு தோல்விகளுக்கு அவரே காரணம் என முத்திரை குத்தப்பட்டது. பல முன்னணி வீரர்கள் கே.எல்.ராகுல் மெதுவாக ஆடுகிறார் என விமர்சித்து தள்ளியிருந்தனர்,
இதனிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்தார். உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேறிய போதிலும் அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி கூறியுள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!