Sports
2022-23க்கான வருடாந்திர ஒப்பந்த வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டது BCCI - டாப் பிரிவில் 3 பேருக்கு இடம் !
ஆண்டுதோறும் பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டு அந்த ஆண்டின் திறமையின் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான மகளிருக்கான 17 பேர் கொண்ட வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏ,பி மற்றும் சி என 3 பிரிவாக வகைப்படுத்தப்பட்டு வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
இதில் ஏ பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஏ பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு 50 லட்ச ரூபாயும், பி பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு 30 லட்ச ரூபாயும், சி பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு 10 லட்ச ரூபாயும் ஆண்டு சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆடவர், மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி சம்பளத்தொகை சமமாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால், பிசிசிஐ-யால் வழங்கப்படும் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ கிரேடு வீரர்களுக்கு 7கோடி ரூபாய் வழங்கப்படும் நிலையில், வீராங்கனைகளுக்கு 50 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.
வீராங்கனைகள் முழு விபரம்:
Grade A: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா
Grade B: ரேனுகா தாகூர், ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ராஜேஸ்வரி கெய்க்வாட்
Grade C: மேக்னா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேக்னா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ஸ்னே ரானா, ராதா யாதவ், ஹர்லீன் டியோல், யாஷ்டிகா பாட்டியா
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!