Sports
காணாமல் போன வீரர்களின் கிரிக்கெட் BAT-கள்.. திகைத்த வெளிநாட்டு வீரர்கள்.. IPL தொடரில் அதிர்ச்சி !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரின் இந்தாண்டு சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரிஷப் பந்த்தின் காயம் காரணமாக இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமை தாங்கி வருகிறார். ஆனால், இந்த தொடரில் இதுவரை மோசமான ஆடிவரும் அந்த அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் காணாமல் போயுள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று டெல்லி அணியினரின் கிட் பேக்குகள் ஒரு தனியார் நிறுவனம் மூலம் டெல்லி விமான நிலையத்தில் மைதானத்துக்கு வந்தநிலையில், அதில் 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
காணாமல் போன விளையாட்டு உபகரணங்களில் யஷ் துல்லின் ஐந்து பேட்களும், டேவிட் வார்னரின் மூன்று பேட்களும், பில் சால்ட்டின் மூன்று பேட்களும், மிட்செல் மார்ஷின் இரண்டு பேட்களும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இது போன்று நடப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!