Sports
அதிரடி கம்பேக் கொடுத்த ஜடேஜா.. அரைசதமடித்த ரோஹித் சர்மா.. INDvsAUS போட்டியின் முதல் நாளில் நடந்தது என்ன?
புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், கவாஜா ஆகியோரை அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஷமி , சிராஜ் ஆகியோர் வெளியேற்றினர். ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய லபுசனே மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் கணக்கை மெதுவாக உயர்த்தினர். 82 ரன்கள் சேர்த்த இந்த இணையை ஜடேஜா காலி செய்தார்.
ஜடேஜாவின் பந்தில் அடுத்தடுத்து லபுசனே, ரென்ஸா, ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழக்க அந்த அணி தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த ஹாண்ட்காப் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறிது பார்ட்னெர்ஷிப் அமைக்க அதை அஸ்வின் காலிசெய்தார்.
பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களை ஜடேஜா, அஸ்வின் ஜோடி விரைவாக வெளியேற்ற முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க இணை சிறப்பாக ஆடியது. அதன் தொடர்ச்சியாக இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அதிரடி அரைசதம் விலாச, மற்றொரு தொடக்க வீரர் ராகுல் 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் ரன் எடுக்காமலும், ரோஹித் சர்மா 56 ரன்களோடும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !