Sports
"தோனி தலைசிறந்த வீரர்களில் ஒருவர், வீரர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தவர்" -புகழ்ந்து தள்ளிய கங்குலி !
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பல்வேறு ஜாம்பவான்களை போலவே இவர் தனது சர்வதேச கிரிக்கெட் காலத்தின் இறுதிக்கட்டத்தில் கரும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், தோனி இந்திய அணியின் ஆல்-டைம் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பது அரிதான ஒன்று. ஆனால் அத்தகைய பின்புலத்தில் இருந்து வந்த தோனி இந்திய அணியில் இடம்பெற்று இந்திய அணியின் ஆல்-டைம் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
அவரை சூழ்ந்துள்ள வீரர்களுக்கு தோனிதான் மாற்றத்தை கொடுத்தார். இந்திய அணியில் திறமை இருக்கும் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்பதை தோனி நிரூபித்துள்ளார். மேலும் பல்வேறு வீரர்களுக்கு தோனி நம்பிக்கையை விதைத்துள்ளார்"என பாராட்டி தள்ளியுள்ளார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!