Sports
5 மாதத்துக்கு முன் இந்திய அணி ஆடிய புகழ்பெற்ற மைதானமா இது.. நம்பமுடியாமல் தவிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!
கடந்த ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த தொடரின் முதல் போட்டி தெற்கு லண்டனில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருப்பார். அதனைத் தொடர்ந்து 111 ரன்களை இலக்காக ஆடிய இந்திய அணி 18. 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றிருக்கும்.
இந்த போட்டியை நிறைய ரசிகர்கள் மறைந்திருந்தாலும் அதில் பலருக்கு ஓவல் மைதானம் நன்கு நினைவிருக்கும். பச்சை பசேலென இருக்கும் அந்த மைதானம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எளிதில் மறக்கக்கூடியது அல்ல. ஆனால், தற்போது அந்த மைதானம் முழுக்க பனியால் நிறைந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த மைதானத்தை நடத்தும் சர்ரே கிரிக்கெட் கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில் பனியால் முழுக்க முழுக்க மூடப்பட்டுள்ள ஓவல் மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதனைப்பார்த்த ரசிகர்கள் அந்த மைதானமா இது என்ற ரீதியில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வழக்கமாக இங்கிலாந்தில் டிசம்பர் மாதங்களில் அதிகபட்ச குளிர் நிலவும். அந்த தருணங்களில் அங்கு பனிமழை பொழியும். வெப்ப நிலை 5 டிகிரிக்கும் கீழே சென்றுவிடும். ஒருமுறை பனிக்காலத்தில் லண்டனின் தேம்ஸ் நதி கூட உறைந்துபோயிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!