Sports
உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி கைது! -வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதல் தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
எனினும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி சுற்றோடு நடையைக் கட்டியது. சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி2 வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் ஆடிய அந்த அணி அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டி முடிந்ததற்கு பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இலக்கை அணியில் தேர்வு செய்யப்பட்ட குணதிலகா ஆஸ்திரேலியா வந்த நிலையில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். எனினும் அவர் நாடு திரும்பாமல் அணியில் தொடர்ந்து வந்தார்
இந்த நிலையில், பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் தனுஷ்கா குணதிலகா மீது அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் இல்லாமல் இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது. கிரிக்கெட் வீரர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!