Sports
"இப்போ பேசுடா பார்ப்போம்"- ரசிகர்களிடம் ஆவேசமான விராட் கோலி! காரணம் என்ன?
இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி உள்ளிட்ட மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், தற்போது லீசெஸ்டர் அணியுடன் பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியின்போது இந்திய அணியின் இளம் வீரரான கம்லேஷ் நாகர்கோட்டி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் அவரை கிண்டலடித்துள்ளனர்.
இந்த காட்சியை மாடியில் இருந்து பார்த்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நாகர்கோட்டியை கிண்டல் செய்த ரசிகர்களை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நாகர்கோட்டியை கேலி செய்த ரசிகர்கள் அமைதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோலி ஆவேசமான ரசிகர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!