Sports
"இப்போ பேசுடா பார்ப்போம்"- ரசிகர்களிடம் ஆவேசமான விராட் கோலி! காரணம் என்ன?
இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி உள்ளிட்ட மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், தற்போது லீசெஸ்டர் அணியுடன் பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியின்போது இந்திய அணியின் இளம் வீரரான கம்லேஷ் நாகர்கோட்டி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் அவரை கிண்டலடித்துள்ளனர்.
இந்த காட்சியை மாடியில் இருந்து பார்த்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நாகர்கோட்டியை கிண்டல் செய்த ரசிகர்களை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நாகர்கோட்டியை கேலி செய்த ரசிகர்கள் அமைதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோலி ஆவேசமான ரசிகர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!