Sports
ஒமைக்ரான் எதிரொலி: Ind vs SA பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஒமைக்ரான் பரவலால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடத்தப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
பாக்சிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தவிர குறைந்தபட்சமாக 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!