Sports
ஒமைக்ரான் எதிரொலி: Ind vs SA பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஒமைக்ரான் பரவலால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடத்தப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
பாக்சிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தவிர குறைந்தபட்சமாக 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!