Sports
இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிடக்கூடாது : சர்ச்சையைக் கிளப்பும் BCCI உத்தரவு!
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்தியாவில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.
இந்நிலையில், இந்திய வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்திய வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது பி.சி.சி.ஐ.
அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. ஹலால் அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
எனவே இனிமேல் அசைவ உணவுகளை சாப்பிட விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அனைத்துவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடமுடியாது. ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பி.சி.சி.ஐ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCIக்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் பி.சி.சி.ஐ-யின் நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடந்துவருகிறது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!