Sports
“எனக்காக எதுவும் பெருசா செய்யாதீங்க” - CSKல் நீடிப்பது குறித்து தோனி சூசகம்!
13வது ஐபிஎல் சீசனின் போது படு மோசமாக விளையாடி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது சென்னை அணி. அப்போது நாங்கள் மீண்டும் வலிமையோடு திரும்புவோம் என அணியின் கேப்டன் தோனி கூறியிருந்தார்.
அதன்படியே 14வது சீசனில் தொடக்கம் முதலே நல்லபடியாக விளையாடி கோப்பையையும் சென்னை அணி கைப்பற்றியிருந்தது. பேட்டிங் பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும் கேப்டனாக அணியை நன்றாக வழி நடத்தி சக வீரர்களுக்கு உந்துதலாக இருந்து கோப்பையை வெல்ல வழி வகுத்திருந்தார்.
இப்படி இருக்கையில், 40 வயதை எட்டியுள்ள நிலையில் தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், 2022 ஐபிஎல் சீசனில் அணிகள் ஏற்கெனவே இருந்த வீரர்களை தக்க வைக்க புது விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி 4 வீரர்களை தக்க வைத்தால் முதன்மையான வீரருக்கு 16 கோடியும், 3 வீரர்கள் என்றால் 15 கோடியும், 1 அல்லது 2 பேர் எனில் 14 கோடியும் உரிமையாளர்கள் செலவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சென்னை அணியில் தோனியை தக்க வைக்கவேண்டுமெனில் அவருக்கு 16 கொடி ரூபாய் சம்பளமாக தர வேண்டி வரும். இது தொடர்பாக பேசியுள்ள அணியின் உரிமையாளர் சீனிவாசன், “தன்னை பெரிய தொகை எடுத்து ஏலத்தில் எடுக்க வேண்டாம்” என தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும், அது அணிக்குதான் நஷ்டம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தோனி நியாயமான மனிதர். அவரை நாங்கள் விட்டுவிட மாட்டோம். அவர் இல்லையெனில் சிஎஸ்கே இல்லை. இருப்பினும் தோனியை போல அணியில் நீடிக்கும் மற்ற வீரர்களுக்கு இந்த சலுகை இருக்காது. ஆலோசனை செய்து முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் அது கடினமானதாகதான் இருக்கும் என சீனிவாசன் கூறியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!