Sports
வங்கதேச அணியை விரட்டிய அமேசான் டெலிவரி பாய்... யார் இந்த ஸ்காட்லாந்து வீரர்?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 7வது டி20 உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்களை எடுத்தது. இதில் ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் 28 பந்துகளில் 45 ரன்களை எடுத்து அசத்தினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஸ்காட்லாந்து அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கிறிஸ் கிரேவ்ஸ் இருந்துள்ளார். பேட்டிங்கில் 45 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
பின்னர், போட்டியின் வெற்றி குறித்து ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொய்ட்சர் பேசுகையில், இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்தவர் என கூறினார்.
இதைக் கேட்டு மைதானத்திலிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டு அவருக்குக் கைதட்டிப் பாராட்டு தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பேசிய கைல் கொய்ட்சர், "கிறிஸ் கிரேவ்ஸின் இன்றைய ஆட்டத்தைப் பார்த்து நான் பெருமையடைகிறேன்.
கிரிக்கெட்டிற்காக அவர் நிறைய தியாகம் செய்துள்ளார். அமேசான் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தவர் இன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அவரின் திறமையை பாராட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!