Sports
அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர்கள்: இதுதான் காரணமா? - BCCI கடும் அதிருப்தி!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரவி சாஸ்திரி தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் இவருடன் தொடர்பிலிருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து பயிற்சியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.
கொரோனா விதிகளை மீறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால்தான் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரிடமும் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது.
Also Read
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக துணை போகும் அதிமுக : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!
-
“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !