Sports
55 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் தோற்ற ஜெர்மனி - கதறி அழுத சிறுமிக்கு ₹29 லட்சம் நிதி!
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் போட்டி இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. அதில் கடந்த ஜூன் 29ம் தேதி சொந்த மண்ணில் ஜெர்மனி அணியுடன் மோதியது இங்கிலாந்து.
அந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கால் இறுதிக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியை நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில், ஜெர்மனி அணியின் போட்டியைக் காண வந்திருந்த அந்நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன் சொந்த நாட்டு அணி தோற்றதை கண்டு மைதானத்தில் கதறி அழுதிருக்கிறார். இது அரங்கத்தின் திரைகளிலும் ஒளிப்பரப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெர்மனியின் தோல்விக்காக சிறுமி அழுதது இணையத்திலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கால்பந்து ரசிகரகளிடையே சிறுமியின் செயலுக்கு எதிர்ப்பு ஆதரவும் எழுந்தது.
அதன் பின்னர், இங்கிலாந்தை சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்ற நபர் ஜெர்மனி சிறுமிக்கு ஆதரவாக ஆன்லைனில் நிதி திரட்டியிருக்கிறார். அதில் 28,500 பவுண்ட்கள் (₹29 லட்சம்) திரட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள அனைவருமே அந்த சிறுமிக்கு எதிரானவர்கள் அல்ல என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !