Sports
55 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் தோற்ற ஜெர்மனி - கதறி அழுத சிறுமிக்கு ₹29 லட்சம் நிதி!
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் போட்டி இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. அதில் கடந்த ஜூன் 29ம் தேதி சொந்த மண்ணில் ஜெர்மனி அணியுடன் மோதியது இங்கிலாந்து.
அந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கால் இறுதிக்குள் நுழைந்தது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியை நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில், ஜெர்மனி அணியின் போட்டியைக் காண வந்திருந்த அந்நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன் சொந்த நாட்டு அணி தோற்றதை கண்டு மைதானத்தில் கதறி அழுதிருக்கிறார். இது அரங்கத்தின் திரைகளிலும் ஒளிப்பரப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெர்மனியின் தோல்விக்காக சிறுமி அழுதது இணையத்திலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கால்பந்து ரசிகரகளிடையே சிறுமியின் செயலுக்கு எதிர்ப்பு ஆதரவும் எழுந்தது.
அதன் பின்னர், இங்கிலாந்தை சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்ற நபர் ஜெர்மனி சிறுமிக்கு ஆதரவாக ஆன்லைனில் நிதி திரட்டியிருக்கிறார். அதில் 28,500 பவுண்ட்கள் (₹29 லட்சம்) திரட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள அனைவருமே அந்த சிறுமிக்கு எதிரானவர்கள் அல்ல என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!