Sports
“குட்பை” - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி, ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மகேந்திர சிங் தோனி, கடந்த 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார்.
தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஜூலை 9ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி 50 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி.
அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்று செய்திகள் வெளிவந்தன. கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத சூழலில் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னைக்கு வந்துள்ள சூழலில் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் தோனி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு அறிவித்ததையடுத்து, சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரெய்னா, 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!