Sports
“ஊரடங்கு காலத்தில் என்ன செய்கிறேன்?” - பிறந்தநாளை முன்னிட்டு மனம் திறந்த சச்சின்! #HBDSachin
ஊரடங்கு காலத்தில்தான் தனது தாயாருடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ‘மாஸ்டர் ப்ளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு உலகளவில் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள சச்சினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சச்சின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தாயிடம் ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றைய நாளை எனது அம்மாவிடம் ஆசி பெற்றுத் துவங்கியுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்தநாளையொட்டி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர், “ஊரடங்கு காலத்தில்தான் என் அம்மாவுடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நாட்களில் கேம்ஸ் விளையாடுவது, இசை கேட்பது, திரைப்படங்களைப் பார்ப்பது தான் பொழுதுபோக்கு.
1970களில் தொடங்கி இப்போது வந்திருக்கும் இசை வரை கேட்பேன். என் பிள்ளைகளே நான் கேட்கும் பாடல்களை முடிவு செய்கிறார்கள். என் ரசனையை அவர்களும், அவர்களின் ரசனையை நானும் புரிந்துகொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!