Sports
“எப்போது ஓய்வு?” - கேப்டன் விராட் கோலி ‘நச்’ பதில்!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 21ஆம் தேதி வெலிங்டன் மைதானத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.
அப்போது, 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக, தான் கிரிக்கெட் களத்தில் விளையாடி வருவதாகவும், ஆண்டுக்கு 300 நாட்கள் கிரிக்கெட்டுக்காக ஒதுக்கி கடின உழைப்புடன் விளையாடி வருவதாகவும் கூறினார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இதே உத்வேகத்துடன் தன்னால் திறம்பட விளையாட முடியும் என்று பேசிய கோலி, அடுத்த 3 ஆண்டுகளில் வரவுள்ள இரண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். அனைத்து அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் உள்ளது என பேசிய கோலி, இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தால் கோப்பையை வெல்ல முயற்சிப்போம் என விராட் கோலி பேசினார்.
இதற்கிடையே, கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, இதுவரை ஓய்வு குறித்து எதுவும் யோசிக்கவில்லை. தேவைப்பட்டால் என்னுடைய 34 அல்லது 35வது வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன். அதுவும் என் உடல் பலவீனம் அடைந்துவிட்டது என உணர்ந்தால் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
31 வயதான கேப்டன் விராட் கோலி, இதுவரை 84 டெஸ்ட், 248 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 21,863 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ''சும்மா தோனி தோனின்னு கத்தாதீங்க'' : பிரஸ்மீட்டில் கொந்தளித்த விராட் கோலி - காரணம் என்ன?
கிட்டத்தட்ட ஜாம்பவான் சச்சினுக்கு நிகராக பேசப்படும் ரன் மெஷின் கோலி, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து இதுவரை 70 சதம் அடித்துள்ளார். விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள், சதத்தில் சதம் கண்ட நாயகன் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!