Sports
முடிவுக்கு வருகிறதா ‘தல’ தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை? - ஹர்பஜன் சிங் சூசகம்!
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஒதுங்கியுள்ளார். அதன் பின்னர் இந்திய அணி விளையாடிய எந்தத் தொடரிலும் தோனி இடம்பெறவில்லை.
இதனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பிலோ, தோனி தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பி.சி.சி.ஐ வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாததற்கு பா.ஜ.க தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவுக்காக தோனி மீண்டும் விளையாட மாட்டார் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பி.சி.சி.ஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. நான் கேள்விப்பட்ட வரையில் உலக கோப்பைதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும். இந்தியாவுக்காக அவர் மீண்டும் விளையாட மாட்டார்.
இதற்கான மனநிலையை நீண்ட நாட்களுக்கு முன்பே அவர் தயார்படுத்திக் கொண்டார். தோனி ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் அவர் மீண்டும் இந்தியாவுக்காக அவர் விளையாடமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!