Sports
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன்... பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!
துபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷரத் குமார் வெள்ளிப்பதக்கமும் மாரியப்பன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
நேற்று நடந்த போட்டியில் 1.83 மீட்டர் தாண்டிய சரத் குமார் இரண்டாவது இடமும், 1.80 மீட்டர் தாண்டிய மாரியப்பன் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
இருவரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக, மாரியப்பன் கடந்த 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய மாரியப்பன், "இந்தப் போட்டியில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தரவில்லை. இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். போட்டி நடைபெற்ற மாலை நேரம் அதிக குளிராக இருந்ததால், சிரமமாக இருந்தது. இருப்பினும், 2020 பாரா ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!