Sports
புதிய சாதனை படைக்கவிருக்கும் ‘ஹிட்மேன்’... ரோஹித் சர்மாவுக்கு கைகொடுக்குமா இன்றைய போட்டி?
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார்.
இதுவரை ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 232 சிக்சர்கள், டெஸ்ட் போட்டிகளில் 51 சிக்சர்கள் மற்றும் டி20 போட்டியில் 115 சிக்சர்கள் என மொத்தம் 398 சிக்சர்களை அடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2 சிக்ஸர் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற இமாலய சாதனை படைக்க உள்ளார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்த வீரர்களாக பாகிஸ்தான் அணியின் ஷாகித் அப்ரிடி(476) மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கெயில் (534) ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!