Sports
INDVSBAN : திட்டமிட்டபடி நடைபெறுமா முதல் T20 போட்டி : குழப்பத்தில் ரசிகர்கள்!
வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேச அணி விளையாட உள்ளது. இதில் முதல் T20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அங்கு போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், விளையாடும் இடத்தை மாற்றுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து படுமோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதை மையமாக வைத்து வீரர்கள் டெல்லி மைதானத்தில் விளையாடினால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும். முதல் போட்டிக்கான இடத்தை டெல்லிக்கு வெளியே மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு நாங்கள் உங்களைக் கோருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முதல் டி20 டெல்லியில் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2017 டிசம்பரில், காற்று மாசுபாட்டால் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர்கள் முகமூடிகள் அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!