Sports
ஷகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை...ஐ.சி.சி உத்தரவு!
வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளுக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டக்காரர் ஒருவர் இவரை அணுகியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஷகிப் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
சூதாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 வருடம் கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது. இந்த விவகாரத்தை தற்போது ஷகிப் அல் ஹசன் ஐ.சி.சி.யிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவுக்கு வரும் நிலையில் ஷகிப் அல்ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வங்கதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விளையாட இருக்கும் வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனாக முஷ்ஃபிகுர் ரஹீமும், டி-20 கேப்டனாக மஹமதுல்லா அல்லது மொசடெக் ஹுசைன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தடை குறித்து ஷகிப் அல் ஹசன் கூறுகையில், “நான் விரும்பும் இந்த ஆட்டத்திலிருந்து தடைசெய்யப்பட்டதை எண்ணி வருந்துகிறேன். சூதாட்டக்காரர்கள் என்னை அணுகியதை ஐசிசியிடம் தெரிவிக்காததை நான் ஏற்றுக் கொண்டு இந்தத் தடையை முழுமையாக ஏற்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!