Sports
விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய அணியின் முன்னணி வீரர்! - காரணம் இதுதான்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் வருகையால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள தி ஹண்ட்ரெட் போட்டிக்கு ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூபாய் 87 லட்சம்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
பி.சி.சி.ஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வரும் 20ம் தேதிக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!