Sports
விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய அணியின் முன்னணி வீரர்! - காரணம் இதுதான்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் வருகையால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள தி ஹண்ட்ரெட் போட்டிக்கு ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூபாய் 87 லட்சம்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
பி.சி.சி.ஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வரும் 20ம் தேதிக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?