Sports
விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய அணியின் முன்னணி வீரர்! - காரணம் இதுதான்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் வருகையால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இருபது ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள தி ஹண்ட்ரெட் போட்டிக்கு ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூபாய் 87 லட்சம்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
பி.சி.சி.ஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வரும் 20ம் தேதிக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!
-
”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!