Sports
பி.சி.சி.ஐ-யிடம் மன்னிப்புக் கோரிய தினேஷ் கார்த்திக் - முடிவுக்கு வருகிறது பிரச்னை
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் கரீபியன் பிரிமியர் லீக் T20 தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரின் துவக்க விழாவில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டு நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் சீருடையை அணிந்து அணி ஓய்வறையில் அமர்ந்திருந்த படம் இணையத்தில் வலம் வந்தன.
இதனையடுத்து, உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பி.சி.சி.ஐ அனுப்பிய நோட்டிஸிற்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.
அதில், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் தான் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளர். கொல்கத்தா அணி குறித்து ஆலோசனை நடத்தலாம் என மெக்கல்லம் அழைப்பின் பேரிலியே அங்கு சென்றேன். அங்கு நடைபெற்ற எந்த போட்டியிலும் நான் பங்கேற்கவில்லை. பி.சி.சி.ஐ அனுமதி பெறாமல் அங்கு சென்றது தவறு தான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை பி.சி.சி.ஐ-யின் நிர்வாக கமிட்டி ஏற்றுக்கொண்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்க படுகிறது.
Also Read
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!