Sports
சிக்கலில் மாட்டிக்கொண்ட தினேஷ் கார்த்திக்..... நோட்டீஸ் அனுப்பிய பி.சி.சி.ஐ!
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் ஆண்டுதோறும் ஐ.பி.எல் போன்று கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் துவக்க விழாவில் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டுள்ளார்.
அவர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான டி.கே.ஆர் அணியின் சீருடையை அணிந்து அணி வீரர்களுடன் ஓய்வறையில் அமர்ந்திருந்த போட்டோ இணையத்தில் வலம் வந்தன.
இந்நிலையில் இவ்விவகாரம் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக திரும்பியுள்ளது. உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக ஒரு வாரகாலம் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டி.கே.ஆர் அணியின் உரிமையாளர்களும். அதன் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அங்கு சென்றிருந்திருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!