Sports
சிக்கலில் மாட்டிக்கொண்ட தினேஷ் கார்த்திக்..... நோட்டீஸ் அனுப்பிய பி.சி.சி.ஐ!
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் ஆண்டுதோறும் ஐ.பி.எல் போன்று கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் துவக்க விழாவில் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டுள்ளார்.
அவர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான டி.கே.ஆர் அணியின் சீருடையை அணிந்து அணி வீரர்களுடன் ஓய்வறையில் அமர்ந்திருந்த போட்டோ இணையத்தில் வலம் வந்தன.
இந்நிலையில் இவ்விவகாரம் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக திரும்பியுள்ளது. உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக ஒரு வாரகாலம் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டி.கே.ஆர் அணியின் உரிமையாளர்களும். அதன் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அங்கு சென்றிருந்திருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு பிடி வாரண்ட்... காரணம் என்ன?
-
குழந்தை திருமணத்தை தடுத்த அதிகாரிகள்... ஆத்திரத்தில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் !
-
திண்டுக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பிரசாரம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு - பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம் !
-
10 மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை : பிரஜ்வல் வீடியோ வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி அதிரடி கைது !