Sports
இந்திய U-19 அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் நீக்கம்? - காரணம் என்ன?
இந்திய அணியின் சுவர் என செல்லமாக அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ஓய்விற்கு பின் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பயிற்சியாளராக இருந்த இந்த காலகட்டத்தில் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றது. மேலும், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதால், அவர் வகித்துவந்த இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பி.சி.சி.ஐ தகவலின்படி, இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக சிதான்சு கோடக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக பராஸ் பாம்ரேயும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இவர்கள் இருவரும் அடுத்த சிலமாதங்களுக்கு மட்டும்தான் பதவியில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!