Sports
இவரா இந்திய அணியின் பயிற்சியாளர்..? முகம் சுளிக்கும் முன்னாள் வீரர்கள் : ஆதரவுக் கரம் நீட்டும் கோலி !
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான இறுதிக் கட்ட நேர்காணலுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை தொடருடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்தது. அடுத்த பயிற்சியாளர் தேர்வு செய்யும் வரை, அவருக்கு 45 நாட்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது பி.சி.சி.ஐ. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள, மூவர் இந்தியர்கள், மூவர் வெளிநாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள்.
ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஃபில் சிம்மன்ஸ், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி, ஆகியோர் இந்த பயிற்சியாளர் பதவிக்கான இறுதிப் போட்டியில் உள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்தவரே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், ரவி சாஸ்திரி தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பது சரியா என்ற ரீதியில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போல கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக பேட்டியளித்தார். கேப்டனின் ஆதரவு இருப்பதால், ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகமே.
வெள்ளிக்கிழமையன்று கபில் தேவ் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு, நேர்காணலை நடத்தி பயிற்சியாளரை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
ஆனால், ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!